Recent Posts

Amma Two Wheeler Scheme for Working Women - பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

 அம்மா இரு சக்கர வாகன திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?



தமிழ்நாட்டை சார்ந்த ஊரக மற்றும் நகர்ப்புற ஏழ்மையான வேலைக்கு செல்லும் மகளிர், தங்கள் பணியிடங்களுக்கு எளிதில் சென்று வர அம்மா இரு சக்கர வாகன திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

பயன்கள்

  • வாங்கிய இருசக்கர வாகன ஆவணங்களை உரிய படிவத்துடன் சமர்ப்பிக்கும்பட்சத்தில் இரு சக்கர வாகனத்திற்கு 50% மானியம் அல்லது ரூ.25,000/- மானியம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மகளிர் திட்டத்தின் மூலம் பயனாளிகள் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறது.
  • மீதமுள்ள தொகையை பயனாளர்கள் வங்கி கடன் அல்லது மற்ற வழிகள் மூலம் பங்களிக்க தயாராக இருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்திற்கு இத்திட்டத்தின் மூலம் மானியத்தை பெற்றுக்கொள்ளலாம்.



தகுதிகள்

  • ஒரு வாழ்வாதார நடவடிக்கைக்காக ஒரு குழுவில் தனித்தனியாக அல்லது கூட்டாக ஈடுபடும் பெண்கள்.
  • ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறையில் தொழிலாளர்களாக பதிவுசெய்யப்பட்ட பெண்கள், எடுத்துக்காட்டாக விவசாய தொழிலாளர் etc...
  • கடைகளில் பணியாற்றும் பெண்கள்.
  • சிறு வர்த்தகத்தில் ஈடுபடும் சுயதொழில் செய்யும் பெண்கள்.
  • அரசு உதவி பெறும் அமைப்பு / தனியார் நிறுவனம் / அரசு திட்டங்கள் /  ஒப்பந்த வேலைவாய்ப்பு - PLF, VPRC ஆகியவற்றில் ஒருங்கிணைந்த சம்பளம் அல்லது தினசரி ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் பெண்கள்.
  • வங்கி நிருபர்கள் / வங்கி வசதிகள் மற்றும் ASHA  தொழிலாளர்கள்.
  • பயனாளி 8 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும்
  • பயனாளி 18 முதல் 40 வயதிற்குட்பட்ட தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டு வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • மேலும் வாகனம் ஓட்டுவதை அறிந்திருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்கும் நேரத்தில் செல்லுபடியாகும் இரு சக்கர வாகனம் ஓட்டும் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.
  • பயனாளியின் வருடாந்திர வருமானம் ரூ .2,50,000 / - ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது (ரூபாய் இரண்டரை லட்சம் மட்டும்).
  • ஒரு குடும்பத்தில் ஒரு பெண் பயனாளி மட்டுமே நன்மைகளைப் பெற தகுதியுடையவர்.
  • தொலைதூர இடங்களிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் வசிக்கும் உழைக்கும் பெண்கள் மற்றும் குடும்ப தலைவிகள், கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள், பட்டியல் சாதி / பழங்குடியினர், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


தேவைப்படும் ஆவணங்கள்

    1. ஆதார் அட்டை
    2. ஓட்டுநர் உரிமம் அல்லது LLR
    3. சாதி சான்றிதழ் (ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்தால்)
    4. கல்வி தகுதி சான்றிதழ் (8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி)
    5. பணி புரிவதற்கான சான்று
    6. பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து அல்லது பணியமர்த்தியவரிடமிருந்து(Employer) பெறப்பட்ட ஊதிய சான்று அல்லது சுயதொழில் மூலம் பெறப்படும் வருமானதிற்க்கான சுய அறிவிப்பு சான்று
    7. வங்கி கணக்குப்புத்தகம் முதல் பக்கம்
    8. பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள சான்று(இருப்பின்)
    9. முன்னுரிமை பெறுவதற்கான சான்று
    10. வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் / விலைப்புள்ளி


விண்ணப்பிக்கும் முறை

  • தங்கள் விண்ணப்பங்களை தங்கள் பகுதி ஊராட்சி ஒன்றியம் (BDO OFFICE) அல்லது நகராட்சி / பேரூராட்சி அலுவலங்களில் உரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
  • கள விசாரணையின் அடிப்படையில் தகுதி மற்றும் முன்னுரிமையின் படி விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டு மாவட்ட அளவிலான பயனாளிகள் தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • தேர்வு பெற்ற விவரம் பயனாளிகளுக்கு அறிவிப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
  • அதன் பின்னர் பயனாளி தனது சொந்த செலவில் வங்கி நிதி நிறுவனகளில் இருசக்கர வாகனம் வாங்கிட வேண்டும்.
  • வாங்கிய இருசக்கர வாகன ஆவணங்களை உரிய படிவத்துடன் சமாப்பிக்கும் நேர்வில் வாகன விலையில் 50% அல்லது ரூ.25000/- இதில் எது குறைவோ அத்தொகை பயனாளியின் வங்கி கணக்கில் ஈடு செய்யப்படும்.


விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்தல்

விண்ணப்ப படிவத்தினை ஆங்கிலம் அல்லது தமிழில் http://www.tamilnadumahalir.org/tnatws.html என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Comments