Recent Posts

Dr. DHARMAMBAL AMMAIYAR NINAIVU WIDOW RE-MARRIAGE ASSISTANCE SCHEME - டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?


இத்திட்டத்தில் விண்ணப்பதாரராக மணமகள் இருக்கலாம். திருமண நாளிலிருந்து ஆறு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


பயன்கள்

  • மணமகள் படிக்கவில்லை எனில் மணமகளுக்கு திருமண செலவிற்காக ரூ.25,000/-க்கான காசோலை மற்றும்  திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்கம் நாணயம் வழங்கப்படுகிறது. 
  • மணமகள் பட்ட படிப்பு / பட்டய படிப்பு முடித்திருந்தால் மணமகளுக்கு திருமண செலவிற்காக ரூ.50,000/-க்கான காசோலை மற்றும்  திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்கம் நாணயம் வழங்கப்படுகிறது.


தேவையான தகுதிகள்

  • வருமான உச்சவரம்பு இல்லை
  • மணமகள் குறைந்தபட்சம் 20 வயதும் மணமகன் அதிகபட்சம் 40 வயதும் திருமண நாளன்று பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்
  • அரசு பணியில் இருக்க கூடாது


தேவையான சான்றுகள்

    1. திருமண அழைப்பிதல் (முதல் திருமணம் மற்றும் மறுமணம்)
    2. விதவை சான்றிதழ்
    3. குடும்ப அட்டை (மணமகள்) அல்லது இருப்பிட சான்றிதழ் 
    4. மணமகள் மற்றும் மணமகனுடைய வயது சான்றிதழ்
    5. தம்பதியரின் திருமண புகைப்படம்
    6. வங்கி கணக்கு முதல் பக்கம்
    7. மணமகள் பட்டம் பெற்றவராயின் அதற்கான சான்று (Provisional & Convocation)
    8. மணமகள் மற்றும் மணமகன் புகைப்படங்கள்
    9. கையொப்பம் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
    10. மணமகள் மற்றும் மணமகனுடைய ஆதார் கார்டு
    11. மேலும் பின்வரும் ஆவணங்கள் தேவைப்படின் (திருமணம் பதிவு செய்த சான்று, இணைப்பு ஒப்புதல் பத்திரம், மணமகள், மணமகன், சாட்சிகள் வாக்குமூலம்)


விண்ணப்பிக்கும் முறை

அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை (Common Service Centre) அணுகவும்


சேவை கட்டணம் - ரூ.  120 /- 


பரிசீலிக்கப்படும் இடம்

விண்ணப்பமானது விண்ணப்பதாரர் கிராம ஊராட்சியில் வசித்தால் ஊராட்சி ஒன்றிய அலுவகத்திற்கும் பேரூராட்சி மற்றும் நகராட்சியில் வசித்தால் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கும் அனுப்பப்படும்


பரிசீலனை செய்யும் அலுவலகம்


ஊராட்சி ஒன்றிய அலுவகம்
(Block Development Office)
மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம்
(District Social Welfare Office)
(ஏற்பு (அ) தள்ளுபடி செய்படும் இடம்)

Comments