Recent Posts

UYEGP LOAN SCHEME - படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் - தொழில் கடன் பெறுவது எப்படி?

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் - தொழில் கடன் பெறுவது எப்படி?



தமிழ்நாட்டை சார்ந்த படித்த வேலையற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் பொருட்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. UNEMPLOYED YOUTH EMPLOYMENT GENERATION PROGRAMME (UYEGP) திட்டத்தின் மூலம் 8 ஆம் வகுப்பு மேல் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், சுயமாக விற்பனை மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கி மானியத்துடன் கூடிய கடனுதவி பெறலாம்.

பயன்கள்

  • பொருளாதார ரீதியில் சாத்தியமாக உள்ள உற்பத்தி, சேவை மற்றும் விற்பனை சார்ந்த தொழில்கள் அனைத்திற்கும் இத்திட்டத்தில் கடன் பெறலாம். வேளாண்சார்ந்த தொழில்கள், எடுத்துக்காட்டாக பயிர் வளர்ப்பு, ஆடு , மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்றவைகளுக்கு இத்திட்டத்தில் கடன் பெற இயலாது.
  • திட்ட மதிப்பீட்டில் அரசு மானிய தொகை 25 சதவீதம் உட்பட 90 முதல் 95 சதவீதம் வரை வங்கிகளில் கடன் கோரலாம்.
  • திட்ட மதிப்பீட்டில் 25% அதிகபட்சமாக ரூ,1,25,000 வரை அரசு மானியமாக வழங்கப்படுகிறது.



தகுதிகள்

  • 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொது பிரிவினராக இருப்பின் 35 வயதிற்குள்ளும், சிறப்பு பிரிவினராக இருப்பின் 45 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
  • குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
  • விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000/ -க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


தேவைப்படும் ஆவணங்கள்

    1. கல்வித்தகுதிக்கான சான்றிதழ்
    2. விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை
    3. குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ்
    4. சாதிச்சான்றிதழ்
    5. முன்னாள் இராணுவத்தினராக இருப்பின் அதற்குரிய ஆவணங்கள்
    6. மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்குரிய ஆவணங்கள்


விண்ணப்பிக்கும் முறை

  • பயனாளிகள் https://www.msmeonline.tn.gov.in/uyegp/ இணையதளத்தில் விண்ணப்பித்து, உரிய ஆவணங்களோடு அதன் நகல்களை மாவட்ட அளவில்  மாவட்ட தொழில் மையத்திலும் சென்னையில் மண்டல இணை இயக்குநர், தொழில் வணிகத்துறை அலுவலகத்திலும்  சமர்ப்பித்து பயன்பெறலாம்.
  • பொது பிரிவினராயிருப்பின், திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும்.
  • சிறப்பு பிரிவினராயிருப்பின், (பட்டியல் இனத்தவர்/ பழங்குடியினர்/ பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும்  பிற்படுத்தப்பட்டோர்/ சிறுபான்மையினர்/ பெண்கள்/ முன்னாள் இராணுவத்தினர்/ மாற்றுத்திறனாளிகள்/ திருநங்கையர்) 5 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும்.
  • இத்திட்டத்தில் கடன் பெற திட்ட அறிக்கை தயார் செய்திட மாதிரி திட்ட அறிக்கை மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்யும் படிவம் ஆகியவை UYEGP திட்ட இணைய தளத்தில் உள்ளது.
  • இத்திட்டத்தில் கடன் பெற விரும்பும் பயனாளிகள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தலைமையிலான UYEGP திட்ட நேர்காணல் குழு மூலம் தெர்வு செய்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.

Comments